புதுக்கடை, டிச. 24 –
புதுக்கடை அருகே உதசிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மனோஜ் (34). இவர் அந்த பகுதியில் மண்பாண்டங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவ தினம் கடையில் இருந்து வெளியே சென்று விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் பின்னர் திரும்பவில்லை. அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் மனோஜ் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் லட்சுமி என்பவர் புதுக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமானவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.


