நாகர்கோவில், ஜன.10-
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் குட் விஷன் சேவா டிரஸ்ட் சார்பில் தமிழர் தற்காப்பு கலைகளை பாதுகாப்போம் என்ற நோக்கத்தில் சிலம்பம் உள்ளிட்ட களரி விளையாட்டு போட்டிகள் இன்று நடைபெற்றது. இதில் 7 வயது முதல் 22 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சிலம்பம், செவிடு முறைகள், கத்தி சண்டை, வாள் சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் மாணவ மாணவியர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



