புதுக்கடை, டிச. 26 –
ராமன்துறையில் மீனவர் காங்கிரஸ் சார்பில் 21-வது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமை வகித்தார். இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், ராமன்துறை காங்கிரஸ் தலைவர் ரீத்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் கலந்து கொண்டு சுனாமி பேரலையில் உயிர் நீத்தவர்களுக்கு கடலில் மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் ராஜகிளன், தேங்காய்பட்டணம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் அக்பர் அலி, குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் நிர்வாகிகள், மற்றும் காங்கிரஸ் வட்டார,நகர, ஊராட்சி காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.



