By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா
ஈரோடுமாவட்டம்

முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா

Last updated: November 4, 2024 10:02 am
November 4, 2024 103 Views
Share
SHARE

 ஈரோடு நவ 3

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் உள்ள முருகன் கோவி  லில் கந்த சஷ்டி விழா ஒவ்வொரு ஆண்டும்  6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான  விழா நேற்று தொடங்கியது.

இதற்காக நேற்று காலை 6.30 மணிக்கு  சென்னிமலை கைலாசநாதர் கோவிலில்  இருந்து வள்ளி-தெய்வானை சமேத சுப் பிரமணியசாமியை படிக்கட்டுகள் வழி யாக மலைக்கோவிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காலை 9 மணிக்கு யாக பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி மகா பூர்ணாகுதி, உற்சவர் மற்றும் மூலவ ருக்கு 16வகையான அபிஷேகங்கள் செய் யப்பட்டன.

மேலும் மதியம் 12 மணிக்கு மகா தீபா ராதனை காட்டப்பட்டு, வள்ளி – தெய் வானைக்கு அபிஷேகம் செய்யப்பட் டது. பின்னர் விநாயகர், மூலவர் மற்றும் உற்சவருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்ற கைகளில் காப்பு கட்டி 6 நாட்கள் விர தத்தை தொடங்கினர்.

தொடர்ந்து வருகிற 7-ந் தேதி வரை

 மலைக்கோவிலில் 6 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 7-ந் தேதி அன்று மாலையில் மலைக்கோவிலில் இருந்து உற்சவ மூர்த்திகள் படிக்கட்டுகள் வழி  யாக அடிவாரத்துக்கு அழைத்து வரப்ப டுகின்றனர். முக்கிய நிகழ்வான சூரசம்  ஹாரம் அன்று இரவு 7 மணிக்கு நடை பெறுகிறது. அப்போது சென்னிமலையில் உள்ள 4 ராஜ வீதிகளில் முருகப்பெருமான் சூரர்களை வதம் செய்கிறார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொள்  கின்றனர்.

இது போல ஈரோடு திண்டல் வேலாயுத சாமி கோவிலிலும் கந்தசஷ்டி விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி யது. இதையொட்டி முருக னுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் னர் வள்ளி-தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு யாகபூஜை நடந்தது.

இதில்  ஏராளமான பக் தர்கள் வந்தனர். அவர்கள் மலை படிக்கட்டு வழியாக ஏறி கோவிலுக்கு சென்ற

 

னர். அங்கு சிறப்பு அலங்காரத்தில்  அருள் பாலித்த முருக பெருமானை  நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கயிறு கட்டி கந்த சஷ்டி விரதத்தை தொடங்கி னர்.

 தொடர்ந்து நேற்று காலை யாகபூஜை, சடாஷர ஹோமம் நடந்தது இன்று (திங்கட்கிழமை) காலை 9  மணிக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. வருகிற பக்து 7-ந்தேதி காலை 10 மணிக்கு

 பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வருகிறார்கள். பின்னர் பக்தர் கள் கொண்டு வந்த பாலில் முருகனுக்கு சிறப்பு அபிஷே கம் நடத்தப்பட்டு அலங்கா ரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி நடக்கிறது.

8 ந்தேதி காலை 9 மணிக்கு வேலாயுதசாமிக்கும், வள்ளி- தெய்வானைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறு  கிறது. இதில் கலந்துகொள் ளும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்படும். மேலும் அன்று பக்தர்கள் தங்களது விரதத்தை முடித்துக்கொள் வார்கள். மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு

September 29, 2024 34 Views
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
படைவீரர் கொடிநாள் வசூலினைமாவட்ட ஆட்சித்தலைவர்துவக்கி வைத்தார்
மாரத்தான் போட்டிக்கான டி-சர்ட் வெளியீடு
லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?