திண்டுக்கலில் இந்த ஆண்டு(2024) 26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் செல்லாண்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக்(31) என்பவரை போக்சோ வழக்கில் நகர் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.அ.பிரதீப் அறிவுறுத்தலின் படி, நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணியன், நீதிமன்ற தலைமை காவலர் நவநீதா மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி இவர்களின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி, குற்றவாளி ஆசிக் முகமது (எ)அல் ஆஷிக் என்பவருக்கு 08 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.25,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.