மதுரை,
ஜூலை 22 நாட்டில் ஆற்றல் துறையின் முன்னணி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னை சர்வதேச வட்டத்தில் இந்திய கார் ஓட்டப் பந்தய சாம்பியன்ஷிப் தருணத்தில் ஓட்டப் பந்தய கார்களுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட உயர் அளவில் ஓக்ட்டேன் கொண்ட ஓட்டப் பந்தய எரிபொருள் ஆன STORM-X என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த தனிச்சிறப்பு மிக்க வேளையில் இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையில் புரட்சியை உண்டாக்கும் நோக்கில் இயங்கி வரும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (MMSC) உடனான தனித்துவம் வாய்ந்த உடன்படிக்கை கையெழுத்து ஆனது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் முன்னதாக இந்தியன் ஆயில் இயக்குநர் (வர்த்தகம்) V. சதீஷ் குமார் கலந்து கொண்டு STORM-X பிராண்டின் சின்னத்தை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார். அப்போது இந்தியன் ஆயில் இயக்குநர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி) அலோக் சர்மா MMSCயின் தலைவர் அஜித் தாமஸ் செயலர் பிரபா சங்கர், துணைத் தலைவர் விக்கி சந்தோக்கே உள்ளிட்ட MMSCயின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.