வேலூர் 15
வேலூரில் டோல்கேட் பகுதியில் உள்ள பங்ஷன் பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணசாமி,
தமிழகத்தில் மதுபான ஆலைகளில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக கடந்த 2023 ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி சார்பில் குற்றச்சாட்டு வைத்தேன்.
தற்போது ஆயிரம் கோடி ஊழல் நடந்து இருப்பதாக அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர்
ஒரு லட்சம் கோடிக்கு மேல் அதிகமாகவே இருக்கும்.
அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் சரியான முறையில் விசாரணை செய்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் மணல் கொள்ளை மதுபான ஊழல் ஆகியவற்றில்
ஆதிகளவில் ஊழல் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர்
விசாரணை செய்து கிடப்பில் போட்டு விடுகின்றனர்.
எனவே அமலாக்கத்துறை
விசாரணையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கந்தன். மாவட்ட இணைச் செயலாளர் பழனி. மாநகர தலைவர் அண்ணாதுரை. மாநகர செயலாளர் பாபு. ஒன்றியச் செயலாளர் தமிழ். மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்



