நாகர்கோவில் மார் 09
குமரி மாவட்ட குலசேகரம் சந்தை அருகில் வைத்து இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் உலக மகளீர் தினம் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் தோழியர் ஆர். செல்வராணி தலைமையில் நடைபெற்றது.இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட துணைத் தலைவர் விஜியம்மா அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட துணைச்செயலாளர் தோழியர் ஆர்.ஷோபணா மகளீர் தினம் தோன்றிய வரலாற்றையும் ஜெர்மன் சோசலிஸ்ட் தலைவி கிளாரா ஜெலஸ்டின் பங்களிப்பை விரிவாக பேசினார்.தோழியர் உஷா பாலியல் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் சந்திக்கும் நிகழ்வுகளை விரிவாக பேசினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தோழியர்கள் இராஜேஸ்வரி, தோழியர் நிர்மலா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.மகளீர்கள் சார்பில் உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது.பாலின சமத்துவத்தை வலியுறுத்தியும்,பாலின வன்கொடுமைக்கு எதிராகவும்,பெண்கல்வியை சீர்குலைக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராகவும், அறிவியல் மனப்பான்மையை வளர்தெடுக்கும் கல்வி முறையை வலியுறுத்தி உறுதிமொழியும் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர்.தா.சுபாஷ் சந்திர போஸ்,மாவட்ட துணை செயலாளர்கள் தோழர் எஸ்.அனில்குமார், தோழர் ஜி.சுரேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் தக்கலை ராஜ் உட்பட திரளான பெண்கள் கலந்து கொண்டனர். dapibus leo.