கோவை மே:22
கோவை மாவட்டம் ஆர் எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தையில் சவுத் இந்தியா டீ ப்ரோமோஷன் கமிட்டி மற்றும் டீ டிரேட் அசோசியேஷன் கோயம்புத்தூர் சார்பில் சர்வதேச தேநீர் தின விழா நடைபெற்றது.
இதில் சவுத் இந்தியா டீ ப்ரோமோஷன் கமிட்டி தலைவர் தீபக் ஷா,டீ டிரேட் அசோசியேஷன் கோயம்புத்தூர் செயலாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்திய தேயிலை வாரியத்தின் கீழ் உள்ள கோவை தேயிலை வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு,கோவையில் ஒரு நிகழ்வை கூட்டாக ஏற்பாடு செய்து சர்வதேச தேயிலை தினத்தை கொண்டாட உழவர் சந்தை தேர்வு செய்து வருகை தரும் விவசாயிகளுக்கும்,வியாபாரிகளுக்கும்
பொதுமக்களுக்கும் இலவசமாக டீ-சர்ட்கள்,தேநீர் விநியோகம் செய்தனர்.சிறப்பு விருந்தினராக உழவர் சந்தை நிர்வாக அதிகாரி டி.சாம்ராவெல்,நீலகிரி டி.ஆர்.எம் என்சிஎம்எஸ் த. முத்துக்குமார்,உதவி நிர்வாக அதிகாரி கோபால்சாமி,திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.அதனைத் தொடர்ந்து சவுத் இந்தியன் டீ ப்ரோமோஷன் கமிட்டி தலைவர் தீபக் ஷா கூறியதாவது இந்தியாவின் முதல் முறையாக சர்வதேச தேநீர் தினத்தை குறித்து ஊக்குவிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உழவர் சந்தையில் துவங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகத்தில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி குடிக்கும் பானம் தேநீர்.உலக சந்தையில் இந்திய தேயிலை மிகவும் பிரபலமானது என்றார்.மேலும் தென்னிந்திய தேயிலை தரத்தை பற்றி வருகை தந்த பொதுமக்களுக்கும்,வியாபாரிகளுக்கும் விவரித்து சொல்ல வாய்ப்பு வழங்கி உறுதுணையாக இருந்த உழவர் சந்தை நிர்வாகிகளுக்கு நன்றிகள் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சவுத் இந்தியன் டீ ப்ரோமோஷன் கமிட்டி ,டீ டிரேட் அசோசியேஷன் கோவை நிர்வாகிகள்,ராகுல் சுக்லா,பாலசுப்பிரமணியம்,பிரபாகரன்,ஆயூப்,செந்தில்,சரவணன்,ராகேஷ்,அனுப் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.