தஞ்சாவூர் மார்ச்.1
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறை , திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை ,திருச்சி உருமு தனலட்சுமி தமிழாய்வுத்துறை, சான்லாக்ஸ் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் ஆகியவை சார்பில் தமிழ் இலக்கியங்களில் கல்வி – செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், புல முதன்மையர்கள் இளையாப் பிள்ளை ,கவிதா, தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் வாசுதேவன், உருமுதனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், சான் லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான முருகேச பாண்டியன் ஆகியோர் பேசினர்
கருத்தரங்கின் ஆய்வு கோவை யை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசினார் .அவர் தனது உரையில்
பாண்டியநாடு கல்விக்கு சிறப்பு டையது. அங்குதான் சங்கம் வைத்து, தமிழ் வளர்க்கப்பட்டது. சேர நாடு வீரத்திற்கு பெயர் பெற்றது. சோழ நாடு செல்வத்தின் தழைத்திருந்தது. அதனால் தான் சோழ நாட்டில் இவ்வளவு கோயில் கள் கட்டப்பட்டுள்ளன. எங்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அங்கு செல்வம் குவிந்திருந்தது .சோழநாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்புற்றிருந்தது. கரிகாலச்சோழன், ராஜராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் குலோத்துங்க சோழன் போன்றோர் கடல் கடந்து வெற்றி பெற்ற அளவு க்கு வீரத்துடன் இருந்தனர். என்றார்
முன்னதாக இலக்கியத் துறை தலைவர் தேவி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்



