ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அலுவலர் அதிரடிமாற்றம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ந் தேதி நடக்கிறது இந்த தேர்தல் நடத்தும் அதிகாரியாக ஈரோடு மாநகராட்சி கமிஷனர் மனிஷ் செயல்பட்டு வந்தார். இவர் அதிரடியாக மாற்றப்பட்டு புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.