நாகர்கோவில் ஆக 4
குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில்
பூக்களின் வரத்து அதிகரிப்பால் விசேஷ நாட்களில் சற்று அதிகரித்து காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. அதிகாலையிலே தோவாளை மலர் சந்தையில் கூடிய வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் பூக்களை அதிக அளவில் கொள்முதல் செய்தனர்.
ஆடிபெருக்கு மற்றும் ஆடி அமாவசை ஒட்டி சிவப்பு, மஞ்சள் கேந்தி ரூ.40ல் இருந்து ரூ.60க்கும், பன்னீர் ரோஜா ரூ.80ல் இருந்து ரூ.120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரளி ரூ.60லிருந்து ரூ.170க்கும், சம்பங்கி ரூ.70லிருந்து ரூ.100க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ.150லிருந்து 200க்கும், துளசி ரூ.20-ல் இருந்து ரூ.30க்கும், தாமரை 2-ல் இருந்து ரூ.5க்கும், பிச்சி மல்லிகை ரூ.400 இருந்து ரூ.600க்கும் விற்கப்படுகிறது.
ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசையை ஒட்டி பூக்களின் தேவை அதிகரிக்கும். இதனால் வழக்கமாக தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இன்று பூக்களின் வரத்து அதிகரிப்பு காரணமாக விலையேற்றம் சற்று உயர்ந்து காணப்படுகிறது.இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.