திண்டுக்கல் மே 15
கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி எதிர்வரும் மே மாதம் 24ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் மாபெரும் மாநாடு, தமிழக ஆயர் பேரவையின் BC MBC DNC பணிக்குழு தலைவர் மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தனது அறிக்கையில் கிறிஸ்தவ வன்னிய மக்கள் தங்களின் 35 ஆண்டுகால கோரிக்கையான கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க கூறி பல்வேறு அறப்போர் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் போது இன்றைய தமிழக முதல்வர் திண்டுக்கல் வடமதுரையில் கழக அரசு மீண்டும் அமைந்தால் கிறிஸ்தவ வன்னியர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் அந்த வாக்குறுதியை கழக அரசு அமைந்து நான்கு ஆண்டுகள் முடிவுற்ற நிலையிலும் இன்று வரை நிறைவேற்றி வில்லை. எனவே வடமதுரை வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்று கோரிக்கையுடன் மாபெரும் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் கிறிஸ்தவ வன்னியர்கள் தன்னிச்சையாக கலந்து கொண்டு நம் இனத்தின் எதிர்வரும் தலைமுறைக்கு நல்ல வாழ்வாதாரம் அமைய தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிறிஸ்தவ வன்னியனும் தங்களுடைய குடும்பத்தோடு இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மாநாடு வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்