மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து,
17 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, போச்சம்பள்ளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பெயர் பலகையை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு மற்றும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் (18.12.2024) அன்று குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து, 17 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:
2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மாணவர்களின் திறன் மேம்படுத்தி உடனடியாக வேலைவாய்ப்பு பெறும் வகையில் 10 அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசாணை எண்.115 நாள் 25.11.2024 ன் படி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் அமைக்கும் வரை தற்காலிகமாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும். ஆண்டுக்கு 108 மாணவர்கள் சேர்க்கை பெறும் வகையில் நான்கு தொழிற்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆண்டில் மொத்தம் 178 மாணவர்கள் பயிற்சிபெறுவார்கள்.
மாணவர்கள் தொழிற்சாலைகளில் எளிதில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கள் (Mechanic Electric Vehicle), ஏரோநாட்டிகள் ஸ்டிரக்சர் & எக்கூப்மென்ட் பிட்டர் (Aeronautical Structure and Equipment Fitter), ரெப்ரிஜிரேசன் & ஏர்கண்டிசனிங் டெக்னீசியன் (Refrigeration and Air Conditioning Technician) ஆகிய இரண்டு ஆண்டுகால தொழிற்பிரிவுகளும், இன்டஸ்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (Industrial Robotics & Digital Manufacturing Technician) எனும் ஓராண்டு கால தொழிற்பிரிவும் தொடங்கப்பட்டு மாநில தொழில் குழும கல்வி (SCVT) முறையில் 2024-2025-ம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகின்ற 31.12.2024 வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு சேர்க்கை செய்யப்படும் மாணவ/மாணவியர்களுக்கு மாதந்தோரும் ரூ.750/- உதவித்தொகை வழங்கப்படும். மேலும், அரசு பள்ளியில் பயின்ற மகளிர் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ரூ.1,000 மும், மாணவர்களுக்கு தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 அரசால் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சிக்கு விலையில்லா பாடபுத்தகம், வரைபடகருவிகள், மடிகணினி, சீருடை, மிதிவண்டி, மூடுகாலணி வழங்கப்படும் மற்றும் இலவச பேருந்து பயண சலுகை வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் சிப்காட் மற்றும் போச்சம்பள்ளி சிப்காட் வளாகங்களில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் ஐடிஐ பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. மேலும் ஐடிஐ முடித்தவுடன் உதவித்தொகையுடன் கூடிய தொழிற்பழகுநர் பயிற்சியும் (Apprenticeship Training) வழங்கப்படுகிறது. ஆகவே 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல பயிற்சி இணை இயக்குநர் (சேலம் மண்டலம்) அமலா ரெக்சலீன், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் பன்னீர்செல்வம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், போச்சம்பள்ளி வட்டாட்சியர் சத்யா, மாவட்ட அறங்காவல் குழு தலைவர் ரஜினிசெல்வம், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், நாகோஜனஹள்ளி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் சாந்தமூர்த்தி, ஒசூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர்/ முதல்வர் ஜெகநாதன், தருமபுரி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சிவகுமார், தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் கலைவாணி, போச்சம்பள்ளி அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் (பொ) சாமுவேல் அய்யாத்துறை, திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளையராஜா, நெசவாளர் அணி அமைப்பாளர் அம்மன் ராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் சாந்தமூர்த்தி, விவசாய அணி துணை அமைப்பாளர் காமராஜ், மீனவரணி துணை அமைப்பாளர் தெய்வம்,
போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் இரவிச்சந்திரன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காந்திமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.