ராமநாதபுரம், ஜன. 30-
ராமநாதபுரம் பாரதி நகரில் ஆர் ஆர் கிராண்ட் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி அதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி ஆகியோர் தலைமையில் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
உரிமையாளர் ஆர் ஜி ரத்தினம், முன்னாள் நகராட்சி சேர்மன் லலிதா கலா ரத்தினம் ஆகியோர் வரவேற்றனர். முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா டாக்டர் மணிகண்டன், டாக்டர் மதுரம் அரவிந்தராஜ், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர் ஜி மருது பாண்டியன், நாட்டுக்கோட்டை ஜெய கார்த்திகேயன், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொழிலதிபர்கள் டாக்டர்கள் இன்ஜினியர்கள் வழக்கறிஞர்கள் அரசு அதிகாரிகள், பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பிரமுகர்கள் காவல்துறை அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.