சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண்ணப்பா நினைவு மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.
இம்மருத்துவ மனையை பத்மஸ்ரீ டாக்டர் மேமன் சாண்டி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச். வி.ஹண்டே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறப்பு விழாவினை சிறப்பித்தார். டாக்டர் எம்.என்.சதாசிவம் அனைவரையும் வரவேற்றார். மருத்துவமனையின் நிறுவனர்கள் டாக்டர் எஸ்.பி.கணேசன், செந்தில் கணேசன் ஆகியோர் பங்கேற்ற அனைவரையும் சிறப்பாக வரவேற்று உபசரித்தனர்.