மதுரை ஜனவரி 28,
மதுரை அழகர் கோயில் உண்டியலில் 80,97,656 காணிக்கையாக கிடைக்க பெற்றது
மதுரை மாவட்டம் அழகர் கோயில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் உண்டியல் திறப்பு நடைபெற்றது. இதில் திருக்கோவிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் ( கூடுதல் பொறுப்பு)செல்லதுரை, திருப்பரங்குன்றம் துணை ஆணையர் /நிர்வாக அதிகாரி சூரிய நாராயணன் திருக்கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், மீனாட்சி, அறங்காவலர் குழு தலைவர் பிரதிநிதி நல்லதம்பி, திருக்கோவில் கண்காணிப்பாளர்கள் பாலமுருகன், பிரதீபா, அருட்செல்வன், பி ஆர் ஓ முருகன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய் 80,97,656/- ரொக்கமும் மற்றும் தங்கம் 54 கிராம், வெள்ளி 465 கிராம் ஆகியன கிடைக்கப்பெற்றன.