திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ள
இந்த பகுதியில் நீர்வளம் மிக்கதாகவும் விவசாய வளம் நிறைந்த பகுதியாக உள்ளது
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள விவசாயிகள்
ஏரியில் இருந்து நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஏரியில் சிலர் குப்பைகளை கொட்டியும் கழிவு நீரையும் திறந்து விட்டு, ஏரியை மாசுபடுத்தி வருகின்றன,
தற்போது இந்த ஏரியில் உள்ள அடிமட்ட நீர் மாசடைந்து விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்,
அதனைத் தொடர்ந்து
வெங்கத்தூர் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் எனவும் அந்தப் பகுதியில் சுமார் 600 குடும்பங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட கிராமமாக உள்ளதாகவும்
அதனை தனி ஊராட்சியாக மாற்ற வேண்டுமென வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் 100 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது சம்பந்தமாக நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.