தருமபுரியில் தமிழக வெற்றி கழக மேற்கு மாவட்ட செயலாளர் தாபா. சிவா தலைமையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதால் தருமபுரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக மகளிர் அணி , சுற்றுச்சூழல் அணி, இளைஞரணி, தகவல் தொழில் நுட்ப அணி சார்பாக ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் மேற்கு மாவட்ட துணை செயலாளர் வீரமணி, மகளிர் அணி சத்யா வீரமணி,விவசாய அணி மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்மூர்த்தி, சிவா, சுற்றுச்சூழல் அணி செந்தில் குமார், இலக்கியம்பட்டி வெங்கடேஷ் ,நாகராஜ், அருள் , கோவிந்தன், தொண்டரணி சுரேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தினேஷ்,விமல், ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்கள்.



