நாகர்கோவில் ஆக 23
குமரி மாவட்டம் எட்டுகூட்டு தேரிவிளை பலவேச சேர்வைகாரர் கோவில் அருகில் மேற்கூரை அமைக்க தொகுதி எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரத்திடம் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியியல் இருந்து ரூ.8 லட்சத்தில் கோவில் அருகில் மேற்கூரை அமைக்க எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் தாமரை தினேஷ் முன்னிலை வகித்தார். தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப் மேற்கூரை அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவி மல்லிகா,அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய அதிமுக பொருளாளர் தங்கவேல், நிர்வாகிகள் தங்கநாடார், செல்ல நாடார், ஊர் தலைவர், நிர்வாகிகள் ,பொதுமக்கள் பங்கேற்றனர்.