கொடைக்கானல் பெருமாள் மலையில் சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.
திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரபாண்டியன், இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் கொடைக்கானல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பெருமாள் மலையில் உள்ள தனியார் எஃப்எல்3 ரிசார்ட் பாரில் திடீரென சோதனை நடத்தினர்.அப்போது அங்கு சட்ட விரோதமாக மதுபான பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.இதை யடுத்து சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த ஒட்டன்சத்திரம் வடகாடு பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் (வயது 47) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 425 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.