வருகின்ற 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை நடைபெற்றது.
மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முன்மொழி திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறை கல்லறை தோப்பு தெருவில் நடைபெற்றது. நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் மோடி கண்ணன், மாவட்ட செயலாளர் கோமல் வினோத், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி சேதுராமன் ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு கலந்து கொண்டு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருக்கின்ற பாரதி ஜனதா கட்சியின் தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முன்மொழித் திட்டத்தை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு செல்வதற்கான முன்னெடுப்பாடுகள் குறித்தும் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் நகரப் பொதுச் செயலாளர் மணிமேகலை, நகரத் துணைத் தலைவர் செல்வகுமார், உள்ளிட்ட ஏராளமான பாஜக பொறுப்பாளர்கள் மகளிர் அணியைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து பாஜக சார்பில் சம கல்வி எங்கள் உரிமை திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக முப்பது ஆயிரம் நபர்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கையெழுத்து இயக்கத்தில் இணைந்துள்ளதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டது.