தருமபுரி மாவட்டம் ,பென்னாகரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனை கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவுக்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் ரத்த சுத்திகரிப்பு மையம், டயாலிஸ் பிரிவு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் பதிவேடு மற்றும் தற்போது உள்ள மகப்பேறு அறை உள்ளிட்டவட்டை ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மருத்துவமனையில் மருத்துவம் நன்றாக வழங்கப்படுகிறதா? மருத்துவர்கள் நோயாளிகளிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதை கேட்ட றிந்தார். ஆய்வின் போது மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் கனிமொழி, தாசில்தார் பிரசன்ன மூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மருத்துவமனை கட்டுமான பணி ஆட்சித்தலைவர்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics