கோவை ஏப்:29
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் திருச்சி சாலையில் உள்ள தியாகி கே வி ஆர் அரங்கத்தில் எச் எம் எஸ் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தமிழ் மாநில எஸ்எம்எஸ் செயலாளரும் சங்கத்தின் தலைவருமான டி எஸ் ராஜாமணி தலைமையிலும் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி மனோகரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக 2025-2027-ஆம் ஆண்டுகளுக்கு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் பி. காளிமுத்து தீர்மானங்களை முன்மொழிந்தார். தீர்மானங்கள், ஒன்றிய அரசு தீவிரவாதத்தை முற்றிலும் அழித்திட வேண்டும், தமிழ்நாடு அரசுக்கும் நல வாரியத்திற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம், ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 10-ஆம் தேதிக்குள் ஓய்வூதியம் வழங்க கோருதல்,வயது ஆவணம் சம்பந்தமாக,உழவர் நலத்திட்ட உறுப்பினரிலிருந்து விலக்கு அளிக்க கோருதல், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்ஷன் வழங்கிடக்கோரி, ஈமச்சடங்கு உதவித்தொகை வழங்கிட கோரி, போன்ற பல்வேறு தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
இந்த கூட்டத்தில் செயல் தலைவர் எம் பழனிசாமி பொருளாளர் எம் பழனிச்சாமி துணை தலைவர்கள் கிருஷ்ணசாமி, சுலோச்சனா,ராஜமாணிக்கம் தீபா, நித்தியானந்தம், கிருஷ்ணதாஸ், துணைப் பொதுச் செயலாளர் காளிமுத்து, செயலாளர்கள் ரமேஷ், தேவராஜன், சாந்தி, ரவீந்திரன், அமைப்புச் செயலாளர் வெர்ஜின் சிட்ருஜா, வீரம்மாள், துணைச் செயலாளர் ராமராஜ், ராஜாமணி, நாகராசு ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் செயல் தலைவர் எம் பழனிச்சாமி நன்றியுரை ஆற்றினார்.