சென்னை, மே 28
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள்மற்றும் சென்னையை ஒட்டி உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
கடந்தாண்டு பருவமழை நேரத்தின் போது, தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மழை காலத்தில் நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை துணை முதல்வர் கேட்டறிந்தார்.
மேலும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டிடவும் அதிகாரிகளை துணை முதல்வர் உதயநிதி வலியுறுத்துள்ளார்.