நாகர்கோவில் ஜூன் 13
குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அன்மையில் 171 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலைகள் போடப்பட்டது. இச்சாலை பணிகள் நடைபெறுவதற்கு முன்னால் பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணி போன்றவற்றிற்காக சாலையில் குழி
தோண்டப்பட்டு மூடப்படும் சாலைகளில் ஜல்லி கலவை போட்டு அதிக பாரத்துடன் அழுத்தம் கொடுத்த பிறகு சாலை அமைக்க வேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால் மாநகராட்சி சாலைகளில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள படி தரமாக பணிகள் நடைபெறாமல்
அச்சாலையின் மீது புதிதாக தார் சாலை போடப்பட்டது. மேலும் பாதாள சாக்கடை மூடிகள் தரம் இல்லாமல் போடப்பட்டதாக சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டை தொடர்ந்து ஏற்கனவே போடப்பட்டிருந்த தரமற்ற பாதாள சாக்கடை மூடிகளை அப்புறப்படுத்தி புதிய மூடிகள் அமைக்கும் பணி மாநகராட்சி சார்பில் நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப்பணிகள் நடைபெறும்போது மாநகராட்சி பொறியாளரோ அதிகாரிகளோ அப்பகுதிகளை பார்வையிடாமலும் ஆய்வு செய்யாமலும் விட்டதின் விளைவு புதிய தார் சாலை போட்ட பிறகு, சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் நடப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில்
நாகர்கோவில் நகரின் முக்கிய பகுதியான டதி பெண்கள் மேல் நிலை பள்ளி சந்திப்பில் பெயிண்ட் ஏற்றி வந்த கனரக வாகனம் இந்த சாலையில் வந்த போது புத்தம் புது சாலையில் வாகனத்தின் சக்ரம் மன்னில் புதைந்து பள்ளம் ஏற்ப்பட்டு வாகனம் கவிழ்ந்து அருகில் நின்ற ஆட்டோவும் முற்றிலும் சேதம் அடைந்தது அப்பளம் போல் நொருங்கியது. இச்சம்பவம் பள்ளி குழந்தைகள் தங்கள் பள்ளிகளுக்கு செல்லும் வேளையான ஒன்பது மணிக்கு நடந்திருந்தால் நிச்சயமாக உயிர்பலி ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு எனவும் அதற்கு ஆதாரமாக லாரி கவிழ்ந்த போது அருகில் நின்ற ஆட்டோ ஒன்று அப்பளம் போல் நொறுங்கி கிடப்பதையும் காண்பித்த பொதுமக்கள் தரமற்ற மாநகராட்சி பணியே இந்த விபத்துக்க காரணம் என தெரிவித்தனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் தரமற்ற பணிகள் நடைபெற்றுள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மாநகராட்சி பொறியாளர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.