நாகர்கோவில், மே 22:
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்து இருந்தது. நேற்று காலை வரை முள்ளங்கினா விளையில் 12.4, சுருளோடு 3.2 குழித்துறை 3.2, கோழிப்போர் விளை 5.4, குளச்சல் 6.2, பூதப்பாண்டி 4.2, மில்லி மீட்டரும் மழை பெய்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.15 அடி ஆகும். அணைக்கு 202 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 36 அடி ஆகும். அனைத்து 105 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 22 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார் – ல் 4.03 அடியாக நீர்மட்டம் உள்ளது. சிற்றார் – 2 ல் 4.13 அடி நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 14.8 அடியும், மாம்பழத்துறை யாறு அணையில் 24.85 அடியும் நீர்மட்டம் உள்ளது.