இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை பெய்து வரும் மிக கனமழையினால் இராமநாதபுரம் நகராட்சி 30வார்டுக்குட்பட்ட
பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை கொட்டும் மழையிலும் நகராட்சி ஊழியர்கள் சிறிதும் தொய்வின்றி உடனுக்குடன் மழை நீரை அகற்றி வருகின்றனர். நகராட்சி சேர்மன் கார்மேகம் மழையில் நின்று நகராட்சி ஊழியர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.