மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் அனைத்து கட்சி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஐக்கிய கைத்தறி சங்க நெசவாளர்கள் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.