தஞ்சாவூர்,
மார்ச் 30 தஞ்சாவூர்
மீனாட்சி மருத்துவமனையின் தலைவர் டாக்டர்
S.குருசங்கர் தலைமையில்
சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவித்து கொண்டாடும் விதத்தில் ஒரு சிறப்பான இஃப்தார் நோன்பு விருந்து நடைபெற்றது.
இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த சுமார் 2000 –க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். மேலும் இஸ்லாமியர்களுக்கு புனித மாதமான ரமலான் நோன்பின் போது பல்வேறு சமயங்களுக்கிடையே நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிப்பதே இந்நிகழ்வின் நோக்கமாகும்
என்றனர்.
மேலும்
இஃப்தார் விருந்தின் போது, பாரம்பரியமான உணவுகள் பரிமாறப்பட்டது.
இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக மகாராஜா சில்க்ஸ் & மஹால் நிறுவனத்தின் உரிமையாளர் முகமது ரஃபி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்த விழாவில்
இந்திய இவான்ஜெலிக்கல் லுத்தரன் ஆலயத்தின் பாஸ்டர் ஜேக்கப் ஜெயராஜ்,
இந்து சமயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள்
மக்கள் தொடர்பு அதிகாரி மணிவாசகம், மற்றும்
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான அல்மாஸ் அலி மற்றும் மீரா பஸ் உரிமையாளர் சர்ஃபுதீன் ஆகியோர் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.