அரியலூர்,அக்;03
அரியலூர் மாவட்டம் செந்துறை முதல்நிலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் கடம்பன் தலைமையில் கிராமசபை கூட்டம் அக்டோபர் 02 ந்தேதி நடைப்பெற்றது.
ஊராட்சி செயலர் சி.ரவி வந்திருந்த அனைவரையும் வரவேற்று கிராம நிர்வாக செலவினங்கள் மற்றும் திட்டப்பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து மக்களுக்குமான குடிநீர், பரமசிவம் நகரில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை, ராயல் சிட்டியில் பொது இடுக்காடு கொட்டகை அமைக்க கோரிக்கை, ஏந்தல் ஏரி, சித்தேரி இரு ஏரிகளையும் சுத்தப்படுத்தி பூங்கா அமைத்து மக்களின் பயன்பாட்டில் கொண்டுவர கோரிக்கை உள்ளிட்ட பொருட்கள் 17 தீர்மானங்களை வாசித்த பின்னர் அவைகள் பற்றி விவாதிக்கப்பட்டன பின்னர் அனைத்துதுறை அதிகாரிகள் துறை சார்ந்த அரசின் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது.
இக்கிராமசபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி உள்ளிட்ட அரசுதுறையினரும், துணைத்தலைவர் தியாக.ரமேஷ் , வார்டு உறுப்பினர்கள் முத்துசாமி, கலியமூர்த்தி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர். முன்னதாக மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்கள் அனைவரும் பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர். கிராமசபை கூட்டத்தின் நிறைவாக ஊராட்சி பணியாளர் சத்யா நன்றி கூறினார்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்