திருவள்ளூர் மே 17 திருவள்ளூர் மாவட்டத்தில்
ஒரே பள்ளியை சேர்ந்த அரசு பள்ளி மாணவர் மணிமாறன் 495 மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும் அதே பள்ளியை சார்ந்த மாணவி செல்வ ஸ்ரீ 494 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பெருமையை பெற்று சாதனை
மார்ச்/ஏப்ரல் 2025இல் நடைபெற்ற இட. இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 440 பள்ளிகளை உள்ளடக்கிய 147 தேர்வு மையங்களில் எழுதிய மாணவர்கள் 15588 மற்றும் மாணவிகள் 15717 ஆக மொத்தம் 31305 மாணாக்கர்கள் தேர்வு எழுதினார்கள்.
இதில் மாணவர்கள் 13550 பேர், மாணவிகள் 14499 பேர் மொத்தம் 28049 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர், திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மாணவர்கள் 86.93 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 92.25 சதவீதம் தேர்ச்சியும் ஆக மொத்தம் 89.60 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2023-2024 ஆம் கல்வியாண்டில் 86.52% தேர்ச்சி சதவீதம் ஆகும்.
மேலும்
2024-2025 ஆம் கல்வியாண்டில் 225 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 7838, மாணவிகள் 8265 ஆக மொத்தம் 16103 தேர்வு எழுதினார்கள். அதில் மாணவர்கள் 6345 மற்றும் மாணவிகள் 7313 ஆக மொத்தம் 13658 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும்
தேர்ச்சி சதவீதம் மாணவர்கள் 80.95% மாணவிகள் 88.48% மொத்தம் 84.82% ஆகும். 2023-2024 ஆம் கல்வியாண்டில் 80.06% தேர்ச்சி சதவீதம் ஆகும்.
வருவாய் மாவட்ட அளவில் 97 பள்ளிகள் (26 அரசு பள்ளிகள் உட்பட) 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
அதுபோல் திருவள்ளூர் மாவட்டத்திலேயே தனியார் பள்ளிகளில் ஸ்ரீ நிகேதன் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவன் 496 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.