By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்

Last updated: July 26, 2024 1:02 pm
July 26, 2024 44 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை – 25, 

 

 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா 24 மணி நேரம் ஆய்வினை நேற்று துவக்கி வைத்து தெரிவிக்கையில்-

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் முதலாவதாக விளங்கோடு, திருவட்டார். கிள்ளியூர் ஆகிய மூன்று வட்டங்களில் உங்களை தேடி உங்கள் ஊரில் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று கல்குளம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் வருவாய்துறை, வேளாண்மை துறை. ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம். கூட்டுறவுத்துறை, வழங்கல் துறை, பள்ளி கல்வித்துறை, குடிநீர் வழங்கல் துறை, சமூக நலத்துறை, நகராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட துறையின் சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.

 

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, மாணவ மாணவியர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களின் வருகை பதிவேட்டை ஆய்வு மேற்கொண்டு, அதில் அதிக நாட்கள் விடுமுறை எடுத்த மாணவ மாணவியர்களிடம் விடுமுறை எடுப்பதை தவிர்த்து படிப்பில் அதிக கவனம் செலுத்தி நன்றாக படித்து, வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. பள்ளியில் அமைந்துள்ள கணினி அறையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. வருங்காலங்களில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திட வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர். பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

அதனைத்தொடர்ந்து பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இம்மருத்துவமனையிலுள்ள நோயாளிகள் அறை, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, மருந்தகம், பொதுவார்டு. உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, தடுப்பூசி குழந்தைகளுக்கு தவறமால் போடப்படுகிறதா ? என பெற்றோர்களிடம் கேட்டறியப்பட்டது. நோயாளிகளின் மருத்துவ பதிவேடு, மேலும் பச்சிளங்குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை நேரில் பார்வையிட்டப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

மேலும் கல்குளம் வட்டத்திற்குட்பட்ட விலவூர் முதல்நிலை பேரூராட்சி அலுவலகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மூலச்சல் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவியர்களிடம் கலந்துரையாடப்பட்டதோடு, சமையல் கூடத்தினை ஆய்வு மேற்கொண்டு, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஈத்தவிளை நியாயவிலைக்கடை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் அரிசி, பாமாயில், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்து கேட்டறியப்பட்டதோடு, நியாயவிலைக்கடையில் கோணிப்பைகள் மற்றும் நீண்ட நாட்களாக இருப்பில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை அப்புறப்படுத்துமாறு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஈத்தவிளை Κ.Ν.Η பெண் குழந்தைகள் காப்பகத்தினை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு. C.S.I மழலையர் தொடக்கப்பள்ளி குழந்தைகளுடன் கலைந்துரையாடி

புகைப்படம் எடுக்கப்பட்டது.

 

சரல்விளை அங்கான்வாடி மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முட்டைக்காடு ஜவஹர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் மற்றும் நகை கடன் தள்ளுபடி குறித்து அலுவலர்களுடன் கேட்டறிப்பட்டது. கோதநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட செம்பருத்திவிளை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, வெளிநேயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறியப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் 15 வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டார சுகாதார மையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் மருத்துவமனைக்கு வருகைப்புரிந்த கர்ப்பிணி பெண்களுடன் உரையாடப்பட்டது. தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட மருந்துக்கோட்டையில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை மட்டும் மற்றும் மட்காத குப்பைகள் என தரம்பிரித்து இயற்கை உரம் தயாரித்து, சந்தைப்படுத்துவது குறித்து அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது.

 

தொடர்ந்து, கல்குளம் வருவாய் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது. பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகம், தக்கலை சந்தை, தக்கலை பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் ஆண்கள் தங்கும் விடுதி நேரில் பார்வையிட்டு, விடுதியினை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திட பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் தக்கலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் இ- சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் தக்கலை சார்பதிவாளர் அலுவலகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தக்கலை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, முதலமைச்சரின் மகளிர் விடியல் பயண பேருந்தில் ஏறி பயணிகளிடம் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்கள்.

 

 

நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி, திட்ட இயக்குநர் பாபு (ஊரக வளர்ச்சி முகமை), பத்மநாபபுரம் வருவாய் கோட்டாட்சியர் தமிழரசி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சேக் அப்துல் காதர், டாஸ்மாக் பொது மேலாளர் சங்கரலிங்கம், சிவகாமி (கூட்டுறவுத்துறை இணை பதிவாளர்), இணை இயக்குநர்கள் ஆல்பர்ட் ராபின்சன் (வேளாண்மை), ராதாகிருஷ்ணன் (கால்நடைதுறை). மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் பாலதண்டாயுதபாணி. உதவி இயக்குநர் கலால் லொரைட்டா. துணை இயக்குநர்கள் ஷீலா ஜான் (தோட்டக்கலைத்துறை). சின்னகுப்பன் (மீன்வளத்துறை) சிவ்வெஸ்டர் சொர்ணலதா (வேளாண்பொறியில் துறை), கீதா (வேளாண்மை விற்பனை பிரிவு). மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிநல அலுவலர் கனகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெரிபா ஜி இம்மானுவேல், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் ஜெயந்தி, மாவட்ட உணவு அலுவலர் செந்தில்குமார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சகிலா பானு, மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) விஜயமீனா, செயற்பொறியாளர்கள் அருள்சன் பிரைட் (நீர்வளத்துறை). கல்குளம் வட்டாட்சியர் முருகன். மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ராஜைய்யன், ஜவஹர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலர் அருள். பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் (பொ) செந்தில்குமார், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், பேரூராட்சி தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர் அனிஷ், தலைமையாசிரியர்கள் ஜாண்சன் (அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி), வில்சன் (அரசு தொடக்கப்பள்ளி), துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You Might Also Like

திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் 13-ம் ஆண்டு விழா மற்றும் பணியேற்பு விழா

ஜி.டி.என். இயற்கை மற்றும் யோகா ஆராய்ச்சி மருத்துவக்கல்வி ஒருநாள் இலவச நீரிழிவு மருத்துவ விழிப்புணர்வு முகாம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா

தருமபுரியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
ஈரோடுமாவட்டம்

மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்

October 15, 2024 22 Views
வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!
பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்
சாம் ஹெல்த் கேர் சர்வீசஸ் நடத்திய மருத்துவ முகாம்
ரோகினி பொறியியல் கல்லூரி மற்றும் முத்தமிழ் கலை ஆராய்ச்சி நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?