வாடிப்பட்டி, ஜூன்.04
மதுரை, மாவட்டம்
வாடிப்பட்டி வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி, ரூ. 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.
வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில், ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு, மதுரை,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை சந்தை செயல்படும். இதில்,
ஆடு மாடு கோழிகள் காலை 5 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிந்து விடும். அதன் பின் காய்கறி, பலசரக்கு வீட்டு உபயோக பொருட்கள் வியாபாரங்கள் மட்டும் தொடர்ந்து விற்பனையாகும்.
இந்நிலையில்,
வரும் 7 ந்தேதி சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதை யொட்டி கிராமப் புறங்களில் இருந்து வெள்ளாடுகள் வந்திருந்தது செம்மறி ஆடுகள் அதிகம் வரவில்லை.
அதனால், ஒரு ஆட்டின் விலை ரூ.15ஆயிரம் தொடங்கி ரூ. 30 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. இதில்,
விலை அதிக என்பதால்,
பாதி ஆடுகள் விற்காமல், திரும்பி சென்றனர்.
இதனால் ரூ.50 லட்சத்திற்கு வியாபாரம்
நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிப்பட்டி வாரச் சந்தையில்பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics