மயிலாடு துறை மாவட்டம், மயிலாடுதுறை திம்மநாயக்கன் படித்துறையில் ரு 1.45 கோடியில் கட்டப்பட்டு பயனற்று இருக்கும் எரிவாயு தகன மேடை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மயிலாடு துறை நகராட்சியும் குடிநீர் வழங்கல் துறை மூலம் 4- / 3 / 2024 அன்று ரு 1.45 கோடியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக எரிவாயு தகன மேடை திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரை அந்த எரிவாயு தகன மேடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் கொண்டு வராததால் அது சமூக விரோதிகள், குடிகாரர்களின் கூடாரமாக மாறி உள்ளது. இந்த எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்கு நகராட்சி நிர்வாகம் இதுவரை கொண்டு வராததால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள், இறந்தவர்களை எரியூட்ட 5 – கி.மி தூரத்தில் உள்ள திருவிழந்தூரில் உள்ள எரிவாயு தகன மேடைக்கு கொண்டு செல்லும் அவலநிலை உள்ளது. மேலும் கால விரயமும், பண விரயமும் ஏற்படுகிறது. இந்த அவல நிலை மாற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம்.



