தேனி.
தேனி அருகே உப்பார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள மாம்பழ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா ஏற்பாட்டினை கோவில் கமிட்டியினர் சிறப்பாக செய்திருந்தனர். இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித கலச நீர் பொதுமக்களுக்கு தெளிக்கப்பட்டது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கம்பம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர் இராமச்சந்திரன், விவசாய சங்கத் தலைவர்சங்கத் தலைவர் ஓ.ஆர். நாராயணன்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கம்பம் நகர தலைவர் எல்.ஆர். சுப்பிரமணியம் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்த கும்பாபிஷேக விழாவத்தில் குலதயாதிகள் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவினை தொடர்ந்து அனைவருக்கும் மகா அன்னதானம் வழங்கப்பட்டது.