ராமநாதபுரத்தில் காந்திமதி அம்மாள் அறக்கட்டளை துவக்க விழா மார்க்கெட் ஜே ஆர் பி காய்கறி கடை வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தர்மமே தலைக்கும் தர்மமே நிலைக்கும் என்ற உயரிய நோக்கத்துடன் காந்திமதி அம்மாள் அறக்கட்டளை அட்சய பாத்திரம் போல் சேவைகள் தொடர்ந்து தடையின்றி வழங்கும் நோக்கில் அட்சய திருதியை நாளில் துவக்க விழா காந்திமதியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் தொழிலதிபர் ஜே.ஆர். பி. மணிகண்டன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் மார்க்கெட் ஜே ஆர் பி காய் கனி வளாகத்தில் நடைபெற்ற இந்த காந்திமதி அம்மாள் அறக்கட்டளை துவக்க விழாவில் அறக்கட்டளை நிர்வாகி ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் தனபாண்டி அம்மாள், வாசுதேவன் பாத்திரக்கடை உரிமையாளர் சிங்காரவேலன், பொறியாளர் சரத்குமார், அரசு போக்குவரத்து கழக நடத்துனர் ராமமூர்த்தி, ஸ்டேட் வங்கி கார்த்தி, ரெயின்போ சுரேஷ்குமார் மற்றும் ஆன்மீக நண்பர்கள் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
காந்திமதியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் பிரபல தொழிலதிபர் ஜே ஆர் பி மணிகண்டன் கூறியதாவது:
நாங்கள் ஏற்கனவே காந்திமதி அம்மாள் நினைவாக 2018 முதல் தொடர்ந்து பல்வேறு மக்கள் நல சேவைகள் செய்து வருகிறோம். இதில் குறிப்பாக கொரோனா காலத்தில் நாட்டுப்புற மேடை கலைஞர்கள் 500 குடும்பத்தினருக்கு அரிசி காய்கறி உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள் வழங்கினோம். மேலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஐந்தாயிரம் நபர்களுக்கு மேல் காய்கறிகள் இலவசமாக வழங்கினோம். கேகே நகர் கொட்டகை களத்தாவூர் உள்ளிட்ட கிராமம் பகுதிகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கினோம். அதுமட்டுமின்றி ஆன்மீக சேவைகளையும் தொடர்ந்து செய்து வருகிறோம். கோயில் திருப்பணிகள் அன்னதான சேவை, ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி சேவை, ஏழைகளுக்கு திருமண உதவி, மருத்துவ உதவி போன்ற உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அவ்வப்போது மக்கள் விரும்பும் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடத்தி மருத்துவ சேவையும் செய்துள்ளோம். ஆன்மீகம் தொடர்பாக யார் எப்போது வந்து எந்த உதவி கேட்டாலும் இதுவரை தடையின்றி செய்து வந்துள்ளோம். கோயில் விழாக்களில் நீர் மோர் பந்தல் அன்னதானம் வழங்கி வருகிறோம். தற்போது இந்த சேவை பணியை காந்திமதியம்மாள் அறக்கட்டளை பெயரில் தொடர்ந்து செய்ய திட்டமிட்டு உள்ளோம், இவ்வாறு அவர் கூறினார்.



