கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் எழுந்தருளியுள்ள சுருளி வேலப்பர் என்ற சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வருகின்ற வியாழக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.எனவே நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணி அளவில் கணபதி ஹோமம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் நா. இராமகிருஷ்ணன்,இந்து சமய அறநிலையத்துறை தேனி மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள் கே.ஆர். ஜெயபாண்டியன் கே.வி.பி. முருகேசன், முருகசபை பக்தர்கள் குழு மற்றும் மெய்யன்பர்கள்,ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.