மதுரை மார்ச் 21,
மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளில் காளை முட்டி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சத்திற்கான காசோலைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி ஆகியோர் உடன் உள்ளனர்.