கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை எழில் மிகுந்த காளிகேசத்தில் சக்தி வாய்ந்த காளிஅம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலில் வருகின்ற 13ம் தேதி (திங்கட்கிழமை) மார்கழி மாத பௌர்ணமி பூஜை விழா நடைபெறுகிறது
அன்று காலை 7.00 மணிக்கு பக்திஇசையும்
9.00 மணிக்கு ராஜமேளமும் 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும்
பகல் 10.30 மணிக்கு உலக நன்மைக்காக பரசேரி சியாமளா விஸ்வேஸ்வரன் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பூஜையும்12.00 மணிக்கு நாதஸ்வர மேளமும்
மதியம் 1.00 மணிக்கு அலங்கார தீபாராதனையும் அதனை தொடர்ந்துமதியம் 1.30 மணிக்கு அன்னதானமும்
, பிரசாதம் வழங்குதல்ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது
பௌர்ணமி பூஜையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காளிகேசத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது
விழாவிற்கான ஏற்ப்பாடுகளை காளிகேசம் அருள்மிகு காளிஅம்மன் கோவில் சேவா அறக்கட்டளை நிர்வாககுழு மற்றும் பௌர்ணமி பூஜை வழிபாட்டு குழுவினரோடு பக்தர்களும் செய்து வருகின்றனர்