தையல் கலைஞர்கள் நல சங்கம் சார்பில் கற்போம் கற்பிப்போம் என்ற நிகழ்ச்சி ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
ஈரோடு மாவட்ட தலைவர் சுமதி
தலமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் கவிதா வரவேற்றார். செயலாளர் கார்த்தி செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத்தலைவர் எழிலரசன் ஒருங்கிணைப்பில் தையல் கலைஞர்களுக்கு பெண்கள் ஆடை தயாரிப்பது குறித்து தையல் கலை பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டது. இதில் மாநில பொதுச்செயலாளர் அகிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தையல் கலை குறித்தும் பெண்கள் தையல் கலையின் தொழில்நுட்பங்களை கற்றால் அதன் மூலம் பொருளாதார அளவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைய முடியும் என்றும் விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியை மாநில துணை தலைவர் எழிலரசன் ஒருங்கிணைத்தார். பெண்களுக்கு தையல் கலை பற்றி இலவசமாக பயிற்சி கொடுக்கப் பட்டது.
தையல் கலைஞர்கள் எழிலரசன், பூபதி, குருசாமி ஆகியோர் எவ்வாறு பெண்கள் ஆடை தயாரிப்பது என்பது குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் எடுத்தனர். இதில் 100 க்கும் பெண்கள் கலந்து கொண்டனர்.



