ஆகஸ்ட் 07: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷஜீவனா வழங்கினார். வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என்று மொத்தம் 343 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜெயபாரதி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வெங்கடாசலம் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மாவட்ட ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சசிகலா மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் நல்லதம்பி ஒருங்கிணைத்தார்.



