சங்கரன்கோவில் ரெட் கிராஸ் சொசைட்டியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்
சங்கரன்கோவில் ரெட் கிராஸ் சொசைட்டி தாலுகா கிளை மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது மேற்படி முகாமில் சுமார் 200 நபர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கண்களை பரிசோதனை செய்து கொண்டனர் மேற்படி நிகழ்வில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் வழக்கறிஞர் இரா.சதீஷ் பொருளாளர் உமா பழனியப்பன் நிர்வாக குழு உறுப்பினர்கள் திலகவதி ஜெயச்சந்திரன் மாரியப்பன் அருந்தமிழ்ச்செல்வன் ராஜேந்திரன் ஆகியோரும் புதிய பார்வை இயக்கத்தின் தலைவரும் ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் சீனியர் சிட்டிசன் கிளப் தலைவர் சுப்பிரமணியன் பசியில்லா சங்கரன்கோவில் அமைப்பின் தலைவர் சங்கர சுப்பிரமணியன் சமூக ஆர்வலர்கள் ராயல் கார்த்திக் ரவிசங்கர் சுரேஷ் சூர்யா ரசிகர் மன்ற தென்காசி மாவட்ட தலைவர் மது செல்வம் நண்பன் டெக்னிகல் இன்ஸ்டிடியூட் நிறுவனர் ராம்குமார் காவல் கிளி ஆகியோரும் கலந்து கொண்டனர்