ராமநாதபுரம், ஜுலை 29-
ராமநாதபுரம் அரண்மனை ராஜா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஸ்ரீ வேதா அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தினர். முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்கள் தேர்வு செய்து மதுரைக்கு அழைத்து சென்று இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. இலவச கண் பரிசோதனை முகாம் ஏற்பாடுகளை ஸ்ரீ வேதா அறக்கட்டளை டிரஸ்டி வீர மூர்த்தி தலைமையில் அறக்கட்டளை தன்னார்வலர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் முருகேசன் ஆகியோர் செய்திருந்தனர். கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் இலவசமாக மூலிகை தேநீர் வழங்கப்பட்டது.