தென்காசி ஏப்ரல் 14
சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூவிருந்தாளி கிராமத்தில் ஒன்றிய பொது நிதியில் இருந்து கலை அரங்கம் கட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து கலை அரங்க கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ் , அன்பழகன்,ஊராட்சி மன்றத் தலைவர் வெள்ளப்பாண்டியன், பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மாவட்ட பிரதிநிதி கே எஸ் மணி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சத்தியபாரதி, கிளை கழக செயலாளர்கள் ஜோசப், பசுபதி, தங்கத்துரை, வர்த்தகர் அணி அமைப்பாளர் சீனிவாசகம், விவசாய அணி அமைப்பாளர் சுந்தர்ராஜ், துணை அமைப்பாளர் வேல்முருகன், மீனவர் அணி அமைப்பாளர் பாலச்சந்தர், பாக முகவர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



