ஓசூர் பெத்தலப்பள்ளி அசோக் லேலண்ட் -2 அருகே உள்ள நடைபாதை பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நடை பாதை அமைத்து கொடுக்கப்பட்டது. அதன் மீது அசோக் லேலண்ட் கம்பெனிக்கு வரும் லாரிகள் நிறுத்திவைப்பதால் பொதுமக்களுக்கு இடையூர் ஏற்பட்டு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. நடைபாதை மீது நிறுத்தி வைக்கப்படும் லாரிகளை அகற்றி நடந்து செல்வதற்கு இடையூறு இல்லாமல் பொதுமக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



