திண்டுக்கல் விடியல் கலைக்குழு மற்றும் கலைக்கண் இணைந்து 6 – ஆவது நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா – 2024 நிகழ்ச்சி திண்டுக்கல் புனித மரியன்னை துவக்கப்பள்ளியில் நடைபெற்றது. இவ்விழாவின் முதல் நிகழ்வாக “மதுவில்லா மானுடம் அமைய” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை திண்டுக்கல் மாநகர துணை மேயர் S.ராஜப்பா, திண்டுக்கல் மகப்பேறு மருத்துவ சங்கத் தலைவர் ஜெ. அமலாதேவி ஆகியோர் துவங்கி வைத்தார்கள். திண்டுக்கல் மாநகர மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் , திருவருட் பேரவையின் பொருளாளர் நாட்டாண்மை Dr.N.M.B. காஜாமைதீன் , அரசன் ரியல் எஸ்டேட் நிறுவனர் S.சண்முகம், ஸ்ரீஅமோகம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர். செல்வராணி ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள். புனித மரியன்னை கலைமனைகள் அதிபர் கலைக்கண் பொதுச் செயலாளர் அருள்தந்தை மரிவளன் சே.ச. வரவேற்புரை மற்றும் அறிமுகவுரை வழங்கினார். திண்டுக்கல் கத்தோலிக்க மறை மாவட்ட மேதகு ஆயர் பி. தாமஸ் பால்சாமி கலந்து கொண்டு தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் அமலிபுஷ்பம்,
திண்டுக்கல் லக்சர் வேர்ல்ட் பள்ளியின் தாளாளர் G.சுவாமிநாதன், திண்டுக்கல் GTN கலைக்கல்லூரியின் வணிகவியல் துறை பேராசிரியர் முனைவர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஆ.அழகு செல்வம் கருத்துரையாற்றினார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் க.கலா, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை தலைவர் டீன் முனைவர் ஜெயப்பிரியா , திருச்சி புனித வளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் ,
திண்டுக்கல் க.சிங்கார கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வளர்மதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு
சிறப்பு அழைப்பாளராக விஜய் டிவி சூப்பர் சிங்கர் புதுக்கோட்டை கழுத்து கார்த்திக் கலந்து கொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்தினார்.இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட கலைக்குழுக்களிலிருந்து 450 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பான கலை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். இதில் சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து விருது பெறுபவர்கள் விவரம்: திண்டுக்கல் கிராமிய பாடகர் முனைவர் தாமரைச்செல்வன், தேனி நடன கலைஞர் அழகர்சாமி, தேனி நாதஸ்வர வாத்திய கலைஞர் ஈஸ்வரன், திண்டுக்கல் பறையிசை கலைஞர்கள் வெங்கடேஷ், பாலசுப்பிரமணி, தோகைமலை கரகாட்டம் சின்ன பொண்ணு, மதுரை சிலம்பம் விக்னேஸ்வரன், திண்டுக்கல் அம்மன் ஆட்டம் நாகராஜ், திருச்சி நாடக கலைஞர் சகாய அமர நாதன், திருச்சி தெருக்கூத்து சண்முகம் , வடமதுரை தவில்இசை கலைஞர் மகேஸ்வரன், நாமக்கல் மரக்கால் ஆட்டம் சரவணன், வேடசந்தூர் ஒயிலாட்டம் ஜெயபிரகாஷ், புகையிலைப்பட்டி ஒயிலாட்டம் ஆரோக்கியசாமி, வேடசந்தூர் தேவராட்டம் விக்னேஷ், நிலக்கோட்டை மல்லர் கம்பம் நாகராஜன், திண்டுக்கல் நாடக நடிகர் ராமசாமிராஜா ஆகிய 18 கலைஞர்களுக்கு பொன்னாடையை அணிவித்து
2024 விடியல் விருதுகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல் ஜி.டி.என். கலைக்கல்லூரியின் ஊடகத்துறை தலைவர் சொல்லின் செல்வர் காதர்பாட்ஷா, திண்டுக்கல் மாண்புரு மங்கை இ. சகாயஅமலி ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை திண்டுக்கல் விடியல் கலைக்குழு மற்றும் கலைக்கண் நிர்வாகிகள் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள். இந்நிகழ்ச்சியின் முடிவில் விடியல் கலைக்குழு இயக்குநர் பேராசிரியர் மு. வெண்ணிலா நன்றியுரை ஆற்ற விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.