மார்த்தாண்டம், மே. 25-
குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் தடைபட்டு உள்ளது. மேலும் பல அசம்பாதங்கள் நடந்துள்ளது.
இந்த மழை நேற்று சனிக்கிழமையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில் குழித்துறை சந்திப்பில் இருந்து பாலவிளை செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய பகுதியில் குளம் போல் மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பகுதியில் உள்ள மழை நீர் ஓடைகள் மாயமான காரணத்தால் இந்த மழை நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த இதனால் அந்த பகுதி வழியாக செல்லும் வாகனங்களில் செல்வர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து எழுந்து செல்லும் நிலை ஏற்பட்டு, போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது