தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூடத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நிறைவு பெற்ற பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அந்த வகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் உட்கட்ட அமைப்பு வசதியுடன் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தை காணொளி வாயிலாக மீனவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து மீன் ஏல கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தை பார்வையிட்டார். இதுபோல் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாட்டில் நீடிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவினை மீனவர்களின் பயன்பாட்டிற்காககொண்டுவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் (மீன் வளம்)ந.சந்திரா, செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி இயக்குநர் புஷ் ரா ஷப்னம்,ஜனார்த்தனன், உதவி செயற்பொறியாளர் ஜெய சுதா, உதவி பொறியாளர் தயாநிதி மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மீனவர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்



