சங்கரன்கோவில் அருகே செல்லபட்டி கிராமத்திற்கு முதல் முதலாக பேருந்து வசதி, ராஜா எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா செல்லப்பட்டி கிராமத்திற்கு மக்களின் வெகு நாள் கனவான பேருந்து வசதியை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி குழந்தைகள் காலையிலும் மாலையிலும் பள்ளி சென்று வர பஸ் வசதி இல்லாததால் நடந்து சென்று படிக்கக்கூடிய சூழ்நிலை இருந்து வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏ பள்ளி குழந்தைகள் பள்ளி சென்று வர காலையிலும், மாலையிலும் கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லப்பட்டிக்கு அரசு பேருந்தை ஏற்பாடு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார் சங்கரன்கோவில் எம் எல் ஏ ராஜா
இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.